Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆந்திராவில் அனுமதி, தமிழ்நாட்டில் மட்டும் தடை ஏன்?


"த‌மிழ் நாட்டின் அர‌பு வ‌ச‌ந்த‌ம்" "TAMILS vs PETA" என்றெல்லாம் வ‌ட‌ இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு போராட்ட‌ங்க‌ளை சித்த‌ரிக்கின்ற‌ன‌.

ச‌ந்தேக‌த்திற்கிட‌மின்றி பீட்டா ஒரு என்.ஜி.ஓ. தான். ஆனால், பெரும் முத‌லாளிக‌ளுக்கு த‌லையிடியாக‌ இருந்த‌ என்.ஜி.ஓ. மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் அத‌ன் ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் ப‌ல‌ பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

உதார‌ண‌த்திற்கு, முய‌ல், மான் போன்ற‌ வ‌ளர்ப்பு மிருக‌ங்க‌ளின் தோல்க‌ளில் இருந்து த‌யாரிக்க‌ப் ப‌டும் உடைக‌ளுக்கு எதிராக‌ பிர‌ச்சார‌ம் செய்த‌து. அத‌னால், ப‌ண‌க்கார‌ வீட்டுப் பெண்க‌ள் அணியும் விலை உய‌ர்ந்த‌ உடைக‌ளின் விற்ப‌னை வீழ்ச்சி க‌ண்ட‌து.

இத‌ற்கு முன்ன‌ர் ஸ்பெயின் நாட்டில் ந‌ட‌க்கும் மாடு பிடிக்கும் விளையாட்டை த‌டை செய்ய‌ வேண்டுமென‌ பீட்டா போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌து. ஸ்பெயினில் விளையாட்டின் முடிவில் மாட்டை விர‌ட்டி ஈட்டி எறிந்து கொல்வார்க‌ள். அத‌னோடு ஒப்பிடும் பொழுது த‌மிழ‌க‌ ஜ‌ல்லிக்க‌ட்டு குரூர‌மான‌து அல்ல‌.

இந்திய‌ பீட்டா அமைப்பில் இந்துத்துவா - பிராம‌ண‌ர்க‌ள் இருப்ப‌து ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம். அதாவது, பிராம‌ண‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌மான‌ மாமிச‌ உண‌வின் மீதான‌ வெறுப்புண‌ர்வு, கோமாதா வ‌ழிபாடு போன்ற‌ன‌ பீட்டாவின் கொள்கையுட‌ன் ஒத்துப் போகின்ற‌ன‌. ஆனால், ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் பீட்டாவின் அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளுட‌னும் ஒத்துப் போவார்க‌ள் என்று சொல்ல‌ முடியாது.

யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தில், "பீட்டாவின் பெய‌ரில் ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌மிழின‌ ம‌ர‌புரிமையை அழிப்ப‌தாக‌" அறிக்கை வாசித்தார்க‌ள்.

ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில், பீட்டா ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் வெறுப்புக்கு ஆளாகி உள்ள‌து. இங்கே என்ன‌வென்றால் அதையே ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌மாக‌ காட்டும் அப‌த்த‌ம் ந‌ட‌க்கிற‌து.

இது அறியாமையில் நேர்ந்த‌ த‌வ‌றாக‌ தெரிய‌வில்லை. இந்துத்துவா பிராம‌ண‌ர்க‌ள் பீட்டாவுக்குள் ம‌றைந்து நிற்ப‌து அவ‌ர்க‌ள‌து சுய‌நல‌ம். அதே மாதிரி, பன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் பின்னால் ம‌றைந்து கொள்ள‌லாம்.

IT ஊழிய‌ர்க‌ள் போன்ற‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ரும் தெருவுக்கு வ‌ந்து போராடுகிறார்க‌ள் என்றால், அங்கே அவ‌ர்க‌ள‌து வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளும் பாதுகாக்க‌ப் ப‌டுகின்ற‌து என்று அர்த்த‌ம். அவ‌ர்க‌ள‌து வேலைக்கு உத்த‌ர‌வாத‌ம் உண்டு என்று அர்த்த‌ம்.

த‌மிழ‌க‌ விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை மர‌ண‌த்திற்கு கார‌ண‌மான‌ மான்சாண்டோ போன்ற‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளை எதிர்த்து இவ‌ர்க‌ள் போராட‌வில்லை. இனிமேலும் போராட‌ப் போவ‌தில்லை. "த‌மிழ‌ர்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்த‌ மான்சாண்டோ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தை எதிர்ப்போம்" என்று வழ‌மையான‌ த‌மிழ்த் தேசிய‌ கோஷ‌த்தின் கீழ் போராட‌லாம். அதெல்லாம் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.

இப்போதும் த‌மிழ் விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை ப‌ற்றி எதுவும் அறிய‌ விரும்பாத‌வ‌ர்க‌ள் தான், ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ "த‌ன்னெழுச்சியாக‌" வ‌ந்து போராடினார்க‌ள். பீட்டாவை த‌மிழின‌ எதிரியாக‌ சித்த‌ரிப்ப‌து, உண்மையான‌ எதிரியின் திசைதிருப்பும் உத்தி. ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் அந்த‌ப் பொறிக்குள் விழுந்து கொண்டிருக்கிறார்க‌ள்.

பீட்டா த‌மிழின‌ எதிரி என்றால், மான்சாண்டோ த‌மிழின‌ ந‌ண்ப‌னாக இருக்க‌ முடியாது. முள்ளிவாய்க்கால் த‌மிழ் இனப்‌ப‌டுகொலையை ஆத‌ரித்த‌ IMF த‌மிழரின் ந‌ண்ப‌னாக‌ இருக்க‌ முடியாது. ‌ த‌ன‌து எதிரியை ச‌ரியாக‌ இன‌ம் காண‌ முடியாத‌ கும்ப‌லுக்குள், எதிரி இல‌குவாக‌ ஒளிந்து கொள்ள‌ முடியும். அது தான் ந‌ட‌க்கிற‌து.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் ஆந்திரா மாநிலத்தில் வழமை போல இந்த வருடமும் ஜல்லிகட்டு நடத்தப் பட்டுள்ளது. (Jallikattu organised in Andhra Pradesh CM Chandrababu Naidu's home district Chittoor; Two bulls die in AP jallikattu)

ஆகவே, நீதிமன்றத் தடை தமிழ்நாட்டில் மட்டுமே, ஆந்திராவில் அல்ல!

தமிழ்த் தேசிய கருத்தியலை நம்புவோருக்கு இந்தத் தகவல் உவப்பானதாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், அவர்கள் "இது தமிழருக்கு மட்டுமே உரிய வீர விளையாட்டு" என்று நம்புவதுடன், அதையே பரப்புரை செய்து வருகின்றனர். சிந்து வெளியில் வாழ்ந்த தமிழர்கள் ஜல்லிகட்டு விளையாடியதாக, இன வரலாறு பேசும் "மொழி ஆய்வாளர்கள்", வழமை போல இனத்தையும், மொழியையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

முதலில் ஜல்லிக்கட்டு என்ற பெயர்ச் சொல் எப்படி வந்தது என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. சல்லிக்கட்டு, அல்லது ஏறு தழுவுதல் என்று, தமிழினத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று காட்ட முனைகிறார்கள். தமிழரும், தெலுங்கரும் இனத்தால் ஒன்று தான். ஆனால், மொழியால் வேறு பட்டவர்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் விளையாடும் அதே ஜல்லிக்கட்டு, ஆந்திராவிலும் விளையாடப் படுகின்றது. 

ஜல்லிக்கட்டு என்ற சொல் கூட தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்திருக்கலாம். தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு எனும் மாட்டை துன்புறுத்தாத விளையாட்டு மட்டுமே இருந்திருக்கிறது. 500 வருடங்களுக்கு முன்னர், தெலுங்கு நாயக்கர் மன்னர் ஆட்சிக் காலத்தில் தான், ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு தமிழ்நாட்டில் புகுத்தப் பட்டிருக்க வேண்டும். இலங்கையில், ஈழத்தமிழரின் பூர்வீகமான வடக்கு கிழக்கில், எந்தக் காலத்திலும் ஜல்லிக்கட்டு விளையாடப் பட்டிருக்கவில்லை.

தமிழருக்கும், தெலுங்கர்களுக்கும், பிற திராவிட மொழிப் பிரிவினருக்கும் இடையில், இது போன்ற பல ஒற்றுமைகள் உள்ளன. அப்படித் தான் சிந்துவெளி ஆதாரத்தையும் நாம் பார்க்க வேண்டும். ஆனால், நமது தமிழ்த் தேசியவாதிகள் அல்லது மொழி அடிப்படைவாதிகள் அவற்றை கண்டுகொள்ளப் போவதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதாடிக் கொண்டிருப்பார்கள்.

தமிழ்நாட்டிலும் ஜல்லிக்கட்டு எல்லா இடங்களிலும் விளையாடப் படுவதில்லை. மதுரை போன்ற தென் பகுதி மாவட்டங்களில் மட்டுமே உள்ள பாரம்பரிய விளையாட்டு. சில குறிப்பிட்ட ஆதிக்க சாதி நிலவுடமையாளர்களின் ஆணவத்தை காட்டவும் விளையாடப் பட்டது. 2006 ம் ஆண்டு வரையில், ஜல்லிக்கட்டு காரணமாக சாதிக் கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால், அதற்காக அந்த விளையாட்டு தடைசெய்யப் படவில்லை.

மிருகவதைக்கு எதிராக போராடும் பீட்டா போட்ட வழக்கின் காரணமாக வந்த தடை என்றால், அது ஆந்திராவிலும் வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தடை போடக் காரணம் என்ன? இதற்குப் பின்னால் சில அரசியல் காய்நகர்த்தல்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. தமிழ்நாட்டில் ஒரு குழப்பத்தை உண்டாக்கும் நோக்கம் இருக்கலாம்.

இந்திய பீட்டா அமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிக்கும் பிராமணர்கள். பீட்டா ஒரு NGO எனப்படும் அரசு சாரா நிறுவனம். அதே நேரம், பீட்டாவை எதிர்த்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் நின்று போராடும் BiCCI கூட ஒரு NGO தான். தமிழக வணிக ஊடகங்கள் மட்டுமல்ல, சினிமா நடிகர்கள், கிரிக்கட் வீரர் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறது.

நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா என்றால், இளம் தலைமுறையினர் ஓடி வருவார்கள். இளங்கன்று பயமறியாது என்பது போல போராட்டத்திற்கு இளைஞர்கள் சேர்வது அதிசயமல்ல. ஆனால், அவர்களை வழிநடத்தும் அரசியல் சக்தி எதுவென்பது தான் பிரச்சினை.

போராட்டத்தில் கலந்து கொள்ளும் இந்து பாசிச சக்திகள், "ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள்" என்று பிரச்சாரம் செய்து தம் பக்கம் வென்றெடுக்க பார்க்கின்றன. அதற்கெதிராக இடதுசாரி சக்திகளும் களத்தில் நின்று போராடுகின்றன.

இந்து பாசிஸ்டுகளின் நோக்கம் நிறைவேறினால் தமிழ்நாடும் மதக் கலவரங்களால் பாதிக்கப்படும். இடதுசாரிகளின் நோக்கம் நிறைவேறினால் தமிழ்நாடு ஜனநாயக மயப் படும். தமிழ்நாட்டு மக்கள் இந்துமதவெறியர்களின் சூழ்ச்சிக்கு பலியாகினால், ஜனநாயகத்தை மீட்பதற்கு தசாப்த காலம் எடுக்கும்.

2 comments:

Rajavadivelu said...

இளைஞர்களின் எழுச்சி போராட்டம்,
தமிழக சம்பிரதாய போராட்டத்தை
அடியோடு
மாற்றியுள்ளது.

இதுவரை
போராட்டம் என்பது மீடியா வரும் வரை,
அல்லது
காலை 10 முதல் மாலை 5 மணி வரை ,

கோரிக்கை நிறைவேறுகிறதோ இல்லையோ
போராட்டம் முடிஞ்சுடும்

ஆனால்
தற்போது நடக்கும் போராட்டம்

தமிழக அரசியல் வாதிகளுக்கு
பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில்

போராட்டம் எனில்
கோரிக்கை நிறைவேறும் வரையில்
இப்படித்தான் போராட வேண்டும் என இளைர்கள் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்

இனி
அரசியல் வாதிகளின்
சம்பிரதாய போராட்டம் எடுபடாது
நகைச்சுவைக்கு உரிய தாகி விடும்

prasanna said...

ஜல்லிக்கட்டு கி.மு.3 நூற்றாண்டில் இருந்ததுக்கான ஆதாரம் உள்ளது. மாறன் என்று பெயர் உடைய காளைமாட்டை அடக்குவது போல் பழைய நாணயம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. அது குறித்து தினமலர் நாளிதலில் படத்துடன் ஒரு வாரம் முன்பு கட்டுரை வெளிவந்துள்ளது.